Uncategorized

சுயநலம்

நிழல்களின் நெருக்கடிக்குள் ஒரு சாலை …..மரங்களுக்குள் கூட போராட்டம் யார் இடத்தை யார் கைப்பற்றிக் கொள்வதென்று…காற்றின் அரசியலில் மரங்களின் சண்டைகள் முடிந்த பாடில்லை….இருள்களில் ஒளிந்து போயிருந்த அவற்றின் சுயநலன்கள்விதைகளுள் ஊடுறுவி விருட்சங்களாகிக் கொண்டிருந்தன….

சுயநலம் Read More »

தீ

இருட்டின் எஜமானன் சத்தங்களின் நிசப்தம் கொண்டு ,பொரி துண்டி எரிய வைக்கப் பார்க்கிறான்,திரியறைந்த மெழுகுக் கட்டம் பற்றிக் கொண்டால் முழுதும் எரியும்…..

தீ Read More »

மழை வானம்

கரு மேகங்கள் காண்பதை மறைக்கும் ஒளிக் கீற்றது இருளதைக் கிழிக்கும் அங்கு மென் மேகங்கள் மோதும் ஒலி கேட்டதும் வான் மழையது தரையோடு ஒளிந்ததுவே

மழை வானம் Read More »

மழை ரகசியம்

பலகோடி துளியது தெளித்து உயிர்கள் ஜனனித்தன அவை மண்ணில் செடி கொடி என மனிதன் விலங்கு என அழைக்கப்பட்டன .. அவை மரணித்த போது மண்ணோடு கலந்து கடலோடு சேர்ந்திட்டன .. உள்ளோடும் உயிரது கடலோடு கடந்திடவே அதைமழையென பொழிவதற்காய் மேகங்கள் மீண்டும் அழைத்தனவே ..

மழை ரகசியம் Read More »

வழிகாட்டி

படைத்துப் போன கடவுள் திரும்பி வராதிருக்க……..பயம் கொண்டு படையல்கள் வைத்தாயோ….அவர் வந்து வாழவென அரண்மனைகள் செய்தாயோ….. மலையில் வாழும் ஈசனும் கடலில் துயிலும் விஷ்ணுவும்கொட்டடியில் பிறந்த ஏசுவும் போதிமரத்தடியில் விழித்த புத்தனும் …மண்விட்டு மறைந்திட…… வழி காட்ட எவருண்டு என்று சாயிகளையும் சாமிகளையும் பிடித்தாயோ…….சமயங்கள் பல வளர்த்தாயோ…..?

வழிகாட்டி Read More »

முடிவு

கடந்த கால தவறுகளை அழிக்க முடியாமல் வருந்துவதிலும்…..தவறவிட்ட இளமைக்காலத்தை பெறமுடியாமல் தத்தளிப்பதிலுமே….எதிர்காலம் நிகழ்காலத்தின் ஊடாக விரைவாக நகர்ந்துவிடுகிறது முடிவில்லா இறுதியை நோக்கி…..

முடிவு Read More »

முகங்கள்

தகுதிக்குத் தடுப்பில்லா முகமூடிகள்கிழிந்தளியும் போதும் ஒழிந்தோடிவிட்டுஇன்னொன்றால் மூடும்,உயர்ச்சியில் மனிதர்கள் உள்ளத்தில் இல்லை……

முகங்கள் Read More »