Thuvarakan / துவாரகன்

அவள்

நிலவில் அவள் வதனம் கண்டதாய் எவனோ புகழ்ந்திருக்கக் கூடும் .. புவியழகு மொத்தமும் அவள் நடைபயின்றதனாலேயே ஜனித்திருக்கவும் கூடும் .. தென்றலும் அவள் தீண்டியதால் என்பதாய் அவன் அறிந்திருக்கக் கூடும் .. முடிவிலா ஆழம் இவள் கண்கள் கொண்டதென அவன் இப்போதுதேனும் அறிந்திருக்கக் கூடும் ..

அவள் Read More »

பிள்ளை மனம்

நிரப்பிய விந்தின் முழுவடிவம் காணவிளையா சாபமா .. அல்லது வறுமையிலும் பத்து பிள்ளைகளான துரோகமா .. சிறுவயிறு கையேந்தி பெருவயிற்றுப் பசி தீர்க்கும் உலகில் .. ஏய்த்துப் பிழைக்கும் பிண்டங்களுக்கு நடுவிலும் கூட எவ்வாறேனும் சிரித்து விடுகிறாய் ..

பிள்ளை மனம் Read More »

பறவைகளே கேளுங்கள் ..

தரையில் நகர்ந்து தளர்ந்து போவதாய் இனி உச்சத்தில் பறந்து உலகம் காணப்போகிறேன் .. என் வாசலில் கரைந்ததற்காய் பறந்து அலையும் உங்கள் காதிற்குள் கதறிப்போகிறேன் .. இதோ என் கடலிடம் திருடியதற்காய் மேகங்கள் உங்களை விழுங்கி விட்டேன் .. இனி அப் பாலத்தில் இருந்து பாய்ந்து அடிவரை காற்றோடு மிதப்பேன் .. மீதமும் பறக்க முடிந்தால் தரையிடம் விடைபெற்றுக் கொள்கிறேன் .. இனி மீண்டும் வரவே மாட்டேன் ..

பறவைகளே கேளுங்கள் .. Read More »

என் மக்கள்

என் உடலை பலவாறாக பிரதி எடுத்து வெளியே அனுப்பி வைத்தேன்…. பிரதிகளை பல மாதங்கள் கூட்டுக்குள் அடைத்து வைத்தாள் ஒருத்தி… வல்லமை அடைந்த அவைவெளியேறியதும் வேறு ஒருவன் ஆகிவிட்டிருந்தன… இன்று முதல் அவை எனது மக்கள்என பெயர் பெறும்….

என் மக்கள் Read More »

காதலி

உதிர்ந்து விழும் பூக்களுக்குள் உதிரமில்லை………..கருகிப் போகும் உடல்களுக்குள் உயிருமில்லை……உருகி உருகி நினைத்த நீயும் இன்றில்லை…………… இனி ………எமக்கு நாளையுமில்லை……………….

காதலி Read More »

கடவுள்

படைத்துப் போன கடவுள் திரும்பி வராதிருக்க……..பயம் கொண்டு படையல்கள் வைத்தாயோ….அவர் வந்து வாழவென அரண்மனைகள் செய்தாயோ…..மலையில் வாழும் ஈசனும் கடலில் துயிலும் விஷ்ணுவும் கொட்டடியில் பிறந்த ஏசுவும் போதிமரத்தடியில் விழித்த புத்தனும் …மண்விட்டு மறைந்திட……வழி காட்ட எவருண்டு என்று சாயிகளையும் சாமிகளையும் பிடித்தாயோ……. சமயங்கள் பல வளர்த்தாயோ…..?

கடவுள் Read More »

தேடல்கள்

முன்னோக்கிச்செல்லும் எனது வண்டியிநூடு பின்னோக்கிச்செல்லும் சூழலோடு கடந்து போகும் நினைவுகளாய்கரையும் எனது வாழ்நாளின் ஒருபகுதி.நின்றமைதியாய்ச் சென்ற நாட்களெல்லாம் விரைந்தோடுவதாய் ஒரு பிரமை.சிறு குழந்தயின் குறும் சிரிப்போ பள்ளித்தோழியின் குறுநகையோ ஏதோவொன்றை இன்னமும் தேடத்தான் செய்கிறேன் பார்க்கும் முகங்களிலெல்லாம்.ஏக்கங்கள் இப்படியாய் ஏமாற்றிப்போக அக்கரைப் பச்சையாய் துடிக்கிறேன் கண்டம் தாண்ட முடியாமல்……

தேடல்கள் Read More »

கண்கள்

அறியாத வயதில் புரியாத பெண்மை…….இலக்கணங்கள் தேடும் அறியாத ஆண்மை…..சிறைகள் சொல்லும் விழுமியங்கள் அவள்கண்கள் பேசுவதால், ஒப்பந்தங்கள் ஏதுமின்றிஉள் சென்று தாளிட்டுக் கொள்கிறேன்….

கண்கள் Read More »

காலம்

கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகள் விரியும் தருணம்…காவியங்கள் தோற்று விடும் வரலாற்று கட்டமைப்பு….மாற்ற விரும்பும் தவறுகள் வரிசையாய் நிற்க….காலம் இன்னோர் தவறுக்கு வழியனுப்பி வைக்கிறது…

காலம் Read More »