இறைவா
கரு கொண்டு உடல் கிழித்து உயிர் கொண்டு வந்தேன்வாழ்வு மேடு பள்ளமென்றாய் ஏற்றுக் கொண்டேன்பொருள் பறித்தாய் பொறுமையும் கைக் கொண்டேன்இன்று என்னிலை பறிக்கிறாய் .. நான் என்றுமேஉன் திறன் காட்ட உருவாகி அழிவேனா
கரு கொண்டு உடல் கிழித்து உயிர் கொண்டு வந்தேன்வாழ்வு மேடு பள்ளமென்றாய் ஏற்றுக் கொண்டேன்பொருள் பறித்தாய் பொறுமையும் கைக் கொண்டேன்இன்று என்னிலை பறிக்கிறாய் .. நான் என்றுமேஉன் திறன் காட்ட உருவாகி அழிவேனா
இரட்டைப் பேச்சில் உருவம் கண்டேன்…இருந்து எரிக்கும் சொந்தம் கண்டேன் ……எதற்காய் என்றேன் ..உனக்காய் என்றான்…..
இருட்டிலொரு தேடல் விடை தேடியல்லமாய உலகத்தில் மனிதனைத் தேடிஇன்மையின் இருப்பைத் தாண்டி மாயத்தின் மேல் நம்பிக்கைதன் பிள்ளைகள் தம்மைத் தாமே சிதைப்பதை காணவொண்ணாமலோ என்னவோ இறைவன் நிரந்தரமாக மேலேயே தங்கிவிட்டான்
நீ வந்து நனைத்துப் போகும் போதெல்லாம்ஆயிரம் பாரங்கள் கரைத்துப் போவதாய் உணர்கிறேன் வானம் ஏன் அடிக்கடி அழுகிறது ..உன் சோகம் அதற்கும் சொல்லிவிட்டாயோ ..
நான் புகைப்படம் எடுக்க முயலும் போதெல்லாம் ஒளிந்து கொண்டது நிலா…. உன்னை போலவே அதற்கும் வெட்கம் வந்ததாம்…
பூக்கும் பூக்களும் சிரிக்கும் குழந்தையும் உலகத்தின் மகிழ்ச்சியை தோற்றுவிப்பவர்கள்.. வெற்றுக் காகிதத்தில் கீறப்பட்ட வண்ணங்கள் பணத் தாள்களான போது அன்பு பாசம் காணாமல் போயிருந்தன..
கால்கள் நடந்து கொண்டிருக்கின்றனகேட்ட சொற்கள் காதுகளை பிடித்திழுக்கபார்த்த செயல்கள் கண்களை பிய்த்தெறியபேசிவிட்ட சுடு சொற்கள் இதயம் கிழித்தெடுக்கஇவையனைத்தையும் தாங்கிக்கொண்டு கால்கள்இன்னும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன இடைவிடாமல் ஓர் இலக்கு நோக்கி ..